முன்விரோதம் காரணமாக இளைஞர் அடித்துக் கொலை ; மூவருக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரில் முன்விரோதமாக காரணமாக இளைஞரை அடித்து செய்துவிட்டு தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் 28 வயதான விக்னேஷ்.

கூலி தொழிலாளியான இவர் இரவு தனது நண்பரை பார்த்து விட்டு பெருங்களத்தூரில் இருக்கும் தனது வீட்டுக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, சரமாரியாக உருட்டுக்கட்டை கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த பொதுமக்கள் சிலர், விக்னேஷ்வரன் குறித்து, பீரக்கன்கரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய விக்னேஷ்யை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து பீரக்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் குறித்து விசாரித்து வந்ததில், மணி, மணிமாறன், சூர்யா என்பவர்கள் விக்னேஷை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் மூவர் தான் கொலையாளிகள் என்பதை உறுதி செய்த போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்ட விக்னேஷ், இதற்கு முன்பு பீரக்கன்கரணை திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்ததும், அந்த சமயத்தில் மணி உள்ளிட்ட மூவருக்கும், விக்னேஷிற்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனால் விக்னேஷ் அப்பகுதியில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு, பாரதி நகர் பகுதியில் குடியேறியுள்ளார்.

இருப்பினும் ஆத்திரமடங்காத மூவரும் விக்னேஷை திட்டம் தீட்டி, கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மணி, மணிமாறன், சூர்யா மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மூவரையும் தேடி வருகின்றனர்

Exit mobile version