கல்லூரி பேராசிரியர் மனைவியை கொலை செய்த இளைஞர் கைது

விருதுநகரில் கல்லூரி பேராசிரியர் மனைவியை கொலை செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் வைரவன். இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார் . இக்கொலை குறித்து ராஜபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவரது மகன் வெங்கடேஷ் என்பவர் கொலை தொடர்பாக கைதாகியுள்ளார். அனிதாவுக்கும் வெங்கடேசுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதில் ஏற்பட்ட தகறாறே கொலைக்கு காரணம் என போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து வெங்கடேசை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version