இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளை பதிவு செய்வார்கள்: பிரதமர் மோடி

நாடு முழுவதும் இரண்டாவது கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளை பதிவு செய்வார்கள் என்று நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேர்தலையொட்டி மக்கள் 100 சதவிகிதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் தங்களது ஜனநாயக கடமையை முறையாக ஆற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தலின்போதும் வலியுறுத்தி வருகிறார்.

நாடு முழுவதும் தமிழகம், அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளை பதிவு செய்வார்கள் என்று தான் நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version