காவல் நிலைய வளாகத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞர்கள்

தருமபுரி அருகே அதியமான் கோட்டை காவல் நிலைய வளாகத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருமபுரி அருகே உள்ள நல்லம்பள்ளி, அம்பேத்கார் காலனியை சேர்ந்த ஆதி கேசவன், ரித்திக் ரோஷன் மற்றும் பள்ளி மாணவன் மதன்குமார், ஆகிய 3 பேர் அடிதடி வழக்கு ஒன்றில், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் மூவரும், காவல் நிலைய வளாகத்தில் டிக் டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். காவல் நிலையத்தை கேலி செய்யும் வகையில் எடுத்த டிக்டாக் வீடியோ பதிவை, சமூகவலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த அதியமான் கோட்டை காவல்துறையினர், சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும், சிறையிலும் அடைத்தனர்.

Exit mobile version