குழந்தையிடம் வன்முறை விதைக்கும் இளைஞர்கள்!

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில், நண்பனின் குழந்தை கையில் பட்டா கத்தி கொடுத்து கேக் வெட்டி, எதிரிகளை பழி தீர்க்க பாடல் பாடி சபதம் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த நண்பனுடைய குழந்தையின் கையில், பட்டாக்கத்தி கொடுத்து பழிக்கு பழி வாங்க சபதமேற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வம்பாகீரபாளையம் சேர்ந்த தெப்லான் முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது நண்பர்கள் அவரது கல்லறையில் கூடி பழிக்கு பழி வாங்க சபதமேற்றினர். தெப்லானின் குழந்தையில் கையில் கத்தியைக் கொடுத்து கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டினர்

மேலும் எதிரிகளை நிச்சயம் பழிக்கு பழி வாங்குவோம் எனவும் அவர்கள் பாடல் பாடினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், குழந்தையின் கையில் கத்தி வழங்கிய மணி என்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கோஷ்டி சண்டையில் நேர்ந்த கொலைக்கு பழி வாங்க குழந்தையின் கையில் கத்தியை வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version