காவலர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் புதுக்கோட்டையில் காவலர் நிறை வாழ்வு என்ற பயிற்சிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். காவலர்கள் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்காக யோகா மற்றும் விளையாட்டு பயிற்சி புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது .
காவல்துறை மற்றும் தனியார் யோகா கழகம் சார்பில், பெங்களூருவில் பயிற்சி பெற்று திரும்பிய காவலர்கள், இந்த பயிற்சியை காவலர்களுக்கு அளிக்க உள்ளனர். மேலும் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு நினைவு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் வழங்கினார்.
Discussion about this post