காவலர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் புதுக்கோட்டையில் காவலர் நிறை வாழ்வு என்ற பயிற்சிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். காவலர்கள் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்காக யோகா மற்றும் விளையாட்டு பயிற்சி புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது .
காவல்துறை மற்றும் தனியார் யோகா கழகம் சார்பில், பெங்களூருவில் பயிற்சி பெற்று திரும்பிய காவலர்கள், இந்த பயிற்சியை காவலர்களுக்கு அளிக்க உள்ளனர். மேலும் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு நினைவு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் வழங்கினார்.