டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்ததாக வெளியான செய்தி தவறானது

டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்ததாக வெளியான செய்தி தவறானது என துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் விளக்கமளித்திருக்கிறார். அதில் தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் பலர் அதிமுகவில் மீண்டும் இணைய விரும்புவதாகவும், அவர்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்ததாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும், உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version