அதிமுக ஆட்சியில் 37 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: துணை முதல்வர்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய அனைத்து திட்டங்களையும் தற்போதைய அதிமுக அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர் ஸ்டாலின் என்றும் திமுக வன்முறை கட்சி எனவும் குற்றம்சாட்டினார். அதிமுக பொற்கால ஆட்சியில் 37 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தொழில்துறை வளர்ச்சியால் தமிழகத்தின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது என்று கூறினார்.

மேலும், தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாமல், காவிரி நதிநீர் ஆணையத்தை கலைப்போம் என கூறியவர் ராகுல்காந்தி என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்தார்.

Exit mobile version