இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக என்றும் பாதுகாப்பாக இருக்கும்: துணை முதலமைச்சர்

இஸ்லாமிய மக்களுக்கு என்றும் பாதுகாப்பாக அதிமுக இருக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட ஹுசைன் ஜிந்தா ஹை எனும் சர்வதேச மாநாடு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில் நடைபெற்றது. இந்திய ஷியா ஒற்றுமை இயக்கம் ஒருங்கிணைத்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதியேற்றுக் கொண்டனர். இஸ்லாமிய மக்களுக்கு நிறைய திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்நதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version