உதவி செய்வது போல் நடித்து செல்போன்-பணம் பறித்த பெண்கள்

உளுந்தூர்பேட்டையில் மயக்கமடைந்தவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து நகையைத் திருடிச் சென்ற மூன்று பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காட்டுப்பரூரைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் இரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட லேசான மயக்கத்தால் படுத்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பெண்கள் உதவி செய்வதுபோல் நடித்து இவரிடம் இருந்த இரண்டு மோதிரங்கள், தங்கக் கடிகாரம், செல்போன் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த நல்லதம்பி இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் காவல் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மூன்று பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரித்த போது நல்லதம்பியிடம் இருந்து பொருட்களைப் பறித்ததை ஒப்புக்கொண்டனர். மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version