குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.13 லட்சம் கொள்ளை

குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டில், 13 லட்சம் ரூபாய் ரொக்கம், வைர அட்டிகை மற்றும் 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் முத்துக்குமார் கேஸ் ஏஜென்சி மற்றும் ஷாப்பிங் மாலை நடத்தி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு வியாபாரம் அதிக அளவில் இருந்ததால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளனர். இரவு, முத்துக்குமார் மற்றும் அவரது மனைவி சித்ரா வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த 13 லட்சம் ரூபாய் ரொக்கம், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர அட்டிகை மற்றும் 8 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் குறித்து குத்தாலம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version