போதிய சம்பளம் இல்லாததால் உறவினர்கள் வீடுகளில் கொள்ளையடித்த காதலர்கள்

உறவினர்கள் வீடுகளில் நோட்டமிட்டு கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பட்டதாரி காதலன், காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கார்த்திக் மற்றும் நித்யா இருவரும் காதலர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர்கள், போதிய சம்பளம் இல்லாததால், உறவினர் வீடுகளில் குறிவைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டு, கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றி உள்ளனர். இந்நிலையில் காரப்பாக்கத்தைச் சேர்ந்த இவர்களது உறவினரான ஜெகதீஷ் பாண்டியன், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் மகிமைவீரன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பட்டதாரி காதலர்களான கார்த்திக் மற்றும் நித்யாவை கைது செய்துள்ளனர்.

Exit mobile version