துணிக்கடையில் ரூ.3.50 லட்சம் கொள்ளையடித்த தம்பதி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் துணிக்கடையில் சிறுவனை வைத்து 3 லட்சம் ரூபாய் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சுந்தரவினாயகர் கோவில் தெருவில் விஜயா என்பவருக்கு சொந்தமான துணி மற்றும் அழகு சாதன பொருட்கள் கடை ஒன்று இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு 8 வயது சிறுமி மற்றும் 11 வயது சிறுவனுடன் வந்த தம்பதியினர் துணி எடுப்பது போன்று விஜயாவிடம் பேரம் பேசி அவரது கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.

அப்போது அவர்களுடன் வந்த சிறுவன் கல்லாவில் இருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து தனது இடுப்பில் மறைத்து வைத்துள்ளான். பிறகு அந்த குடும்பத்தினர் கடையை விட்டுச் சென்றவுடன், விஜயா கல்லாவை திறந்து பார்த்த போது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து விஜயா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் சிறுவன் பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனைக் கொண்டு காவல்துறையினர் அந்த குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

Exit mobile version