துபாயில் கஷ்டப்படும் கணவரை மீட்கக் கோரி பெண் மனு

துபாயில் கஷ்டப்படும் தன் கணவரை மீட்கக் கோரி கல்லல் பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண், சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே, அரண்மனை சிறுவயல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு, கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் கொத்தனர் வேலையை தவிர, மற்ற வேலைகளை கொடுத்து நிர்வாகம் தன்னை துன்புறுத்தியதாகவும், இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் தன் மனைவிக்கு வீடியோ மூலம் தகவல் அனுப்பியுள்ளார். மேலும் அந்த வீடியோவில், தன்னை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேஷ் கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த அவரது மனைவி கவிதா, துபாயில் கஷ்டப்படும் தனது கணவரை மீட்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் மனு அளித்துள்ளார். மனுவில், தன் கணவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கண்ணீர் மல்க, தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version