திருப்பத்தூர் அருகே நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த பெண்!

ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு குப்புராஜப்பள்ளியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர், வனவிலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுவதற்காக, 2 நாட்டு துப்பாக்கிகளை விவசாய நிலத்தில் பதுக்கிவைத்திருந்ததாக கூறப்படுகிறது. நாட்டுத் துப்பாக்கியை சிலம்பரசன் நிலத்தில் இருந்து எடுக்கும்போது கைத்தவறி லிவரில் பட்டதில், அவரது மனைவி கஸ்துரியின் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த கஸ்தூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிலம்பரசனை கைது செய்த போலீசார் 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version