அரசு தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பெண் காயம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம் அடைந்தார். மாணிக்கம் மங்கலம் கிராமத்தில், பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், வாசுகி என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், மகள் செவ்வந்தி கையில் காயம் ஏற்பட்டது.

Exit mobile version