கோவையில் பெண்ணை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கடந்த 2013 ஆம் ஆண்டு, கோவையில், பெண்மணி ஒருவரை நகைக்காக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிவுற்ற நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி யாசர் அராபத்திற்கு, தடயங்களை அழித்ததற்காக 7ஆண்டுகள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும், கொள்ளைக்காக 7ஆண்டுகள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி, கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Exit mobile version