ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !

கோவை விமான நிலைத்தில் இருந்து ஈஷா யோகா மையத்திற்கு சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். தொடர்ந்து, தீர்த்த குளத்தை வணங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தியானப் பீடத்தில் பிரார்த்தனை செய்தார். உடன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர். குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி கோவையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version