கோவில் உண்டியலை திருடிய மர்ம ஆசாமிகள் !

கோவை கே.ஜி சாவடி பகுதியில் உள்ள திருக்கோவிலில் நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை பாலக்காடு சாலை கே ஜி சாவடி பகுதியில் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. அதிகாலை கோவிலை திறந்து பூஜை செய்ய வந்த போது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டதை கண்டு கோவில் பூஜாரி அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். விடியா ஆட்சியில் கொள்ளையர்கள் அச்சமின்றி உலாவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Exit mobile version