கிருஷ்ணகிரி அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி உள்ளிட்ட மூவருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அத்திகானூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியானா சஞ்சீவன் என்பவரது மனைவி அனிதாதேவியும், அவர் கள்ளக்காதலன் ஜெயப்பிரகாசும் இணைந்து கடந்த 2011ஆம் ஆண்டு சஞ்சீவனைக் கொன்று புதைத்தனர். இந்த வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு கிருஷ்ணகிரி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில், அனிதா தேவி, ஜெயப்பிரகாஷ் மற்றும் இந்த கொலைக்கு உதவிய கரூரைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஆகிய மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 25ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.