தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சிவபுரம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

அவரது மனைவி ஷோபனாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதை அறிந்த அன்பழகன் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் மற்றும் ஷோபனா இருவரும் அன்பழகனை கொடூரமாக கொலை செய்து வீட்டின் அருகே உள்ள கூவம் ஆற்றில் புதைத்துள்ளனர்.

பின்னர், கணவனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்த சோபனா கள்ளக்காதலனுடன் தலைமறைவானார்.

காவல்துறையின் விசாரணையில், இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் அவர்களை கைது செய்த தனிப்படை, அன்பழகனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு திரண்ட உறவினர்கள், ஷோபனா மற்றும் தர்மராஜை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

Exit mobile version