6 வருடங்களாக காதலித்து திருமணம் செய்த பெண் கொன்று புதைப்பு

6 வருடங்களாக காதலித்து திருமணம் செய்வதாக கூறி தற்போது வேறு திருமணம் செய்வதற்கு இடையூறாக இருந்த காதலியை கொன்று வீட்டு வளாகத்தில் புதைத்து சம்பவம் தமிழக கேரளா எல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்…

கன்னியாகுமரி மாவட்டம் அம்பூரி மலையோர பகுதியை சேர்ந்தவர் அகில். வயது 26. கடந்த ஆறு வருடங்களுக்கு முன் தனது மொபைல் போனில் ஒரு missed call மூலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின் கரை அருகே திருபுறம் பகுதியை சேர்ந்த ராகி மோள் ( 29 ) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் ராகி ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால் அகில் மற்றும் அவரது குடும்பத்தினர் ராகியை புறக்கணித்தனர்.

அகில் மற்றும் ராகி இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கோயிலில் வைத்து ரகசிய திருமணம் செய்துவிட்டு ரகசிய குடுத்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அகில் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் பெற்றோர் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்து அகிலன் குடும்பத்தாரை ஏற்கனவே திருமணமான ராகி எதிர்த்துள்ளார். இந்த நிலையில் எர்ணாகுளம் செல்வதாக கூறிய ராகி மாயமாகியுளார்.இது சம்மந்தமாக ராகியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அம்பூரி பகுதியில் அகிலன் பூட்டியிருந்த வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் பின்புறம் ராகியின் உடல் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக அகிலனின் நண்பர் மற்றும் சகோதரர் ராகுலை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி ராகியை காரில் அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version