ரயில்வே தண்டவாளம் அருகே பெண்ணின் உடல் மீட்பு- கள்ளக் காதலன் கைது

ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தின் அருகே பெண் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட வழக்கில் கள்ளக் காதலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த 20ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க சிவரத்தினம் என்ற பெண் உடல் சிதைந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் வண்ணாரப்பேட்டை ஏழுமலை என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் பனியன் கம்பெனியில் வேலைப்பார்க்கும் போது, பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலர்களாக இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், வாக்கு வாதம் முற்றி கொலை செய்ததாக ஏழுமலை வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version