மனைவியை உளியால் குத்திக்கொன்ற கணவர் கைது

திண்டுக்கல் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு உளியால் குத்திக்கொன்ற கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள வேம்பார் பட்டியை சேர்ந்தவர் மலர்செல்வி. இவரது கணவர் பிரபு வெளியூரில் தங்கி தச்சுவேலை செய்து வருகிறார். இதனிடையே மனைவியின் நடத்தையில் பிரபு தொடர்ந்து சந்தேகம் கொண்டு அவருடன் தகறாரில் ஈடுபட்டு வந்தார். பள்ளி விடுமுறை காரணமாக இவர்களது இரு மகன்கள் தாத்தா வீட்டுக்கு சென்ற நிலையில் மலர்செல்வியுடன் சண்டையிட்ட பிரபு, வீட்டில் இருந்த உளியால் மலர்ச்செல்வியை கொடூரமாக குத்திக்கொன்று விட்டு தப்பிச்சென்றார்.

கொலை குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் மலர்ச்செல்வியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பிரபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version