ஜோசப் நீ எனக்கு உண்மையா இல்ல… கள்ள காதலனிடம் உண்மைக் காதலை எதிர்பார்த்த கள்ளக்காதலி

காஞ்சிபுரம் அருகே, கள்ளக்காதலன் இன்னொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருப்பதை அறிந்த காதலி ஒருவர், தனது மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு லாவண்யா என்ற தங்கையும் இருந்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன் பிரவசத்தின் போது அவர் இறந்து விட, தங்கையின் கணவனான ஜோசப்பை தனது வீட்டில் மாடியில் குடிவைத்துள்ளார் செண்பகவல்லி.

மாடியில் குடியேறிவர்… மெல்ல மெல்ல செண்பகவள்ளியின் மனதிலும் குடியேறியுள்ளார். கணவர் மாடாய் உழைத்து கொட்ட, செண்பகவள்ளி என்னும் செடி, மாடி வீட்டு மன்மதனுக்கு மலர்களை அள்ளி தரத் தொடங்கியது. ஆனால் ஜோசப்போ, வீட்டில் செண்பகவள்ளி, வெளியில் வேறோரு பெண் என, இரு குதிரைகள் பூட்டிய வண்டியில் சவாரி செய்துள்ளார்.

விஷயம் அறிந்து ஜோசப்பை கண்டித்துள்ளார் செண்பகவள்ளி. ஆனால் ”கட்டிய மனைவி போல கண்டிக்கும் வேலையெல்லாம் வைத்து கொள்ளாதே…!” என ஜோசப் அவரை எடுத்தெறிந்து பேச, திருடனுக்கு தேள் கொட்டியதை போல் கள்ளக் காதலன் தனக்கு இழைத்த அநீதியை வெளியில் சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், மனதில் வைத்து புழுங்கி தவித்துள்ளார் செண்பகவள்ளி.

ஒரு கட்டத்தில், விரக்தியின் விளிம்புக்கு சென்ற அவர், தற்கொலை செய்யப் போவதாக கணவனுக்கு வீடியோ மெசேஜ் அனுப்பி உள்ளார். தனது மனைவியின் மறுபக்கம் அப்போதுதான் அவருக்கு தெரிய வந்தது. எனினும் ”வந்து பேசிக் கொள்கிறேன், தவறான முடிவேதும் எடுத்து விடாதே” என்று பதில் மெசேஜ் அனுப்பி வீட்டிற்கு விரைந்துள்ளார் அந்த அப்பாவி கணவர்.

ஆனால், அதற்குள் செண்பகவள்ளி முடிவை தேடிக் கொண்டார். துக்கம் தாள முடியாத அவர், துப்பட்டாவால் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து, தலைமறைவான தகாத உறவை வலை வீசி தேடி வருகின்றனர். 3 குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு, கள்ளக் காதலனுக்காக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version