நகை கொள்ளை சம்பவம்: சிசிடிவி காட்சி உதவியுடன் பெண் கைது

சென்னை கோயம்பேட்டில் 16 சவரன் நகை கொள்ளை போன சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெற்குன்றம் சரஸ்வதி காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த 26 ஆம் தேதி குடும்பத்தினருடன் குற்றாலம் சென்றிருந்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, 16 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த கவியரசி என்ற பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்து 16 சவரன் நகையை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version