திருமண வீட்டில் கதவை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாலாஜாபேட்டையை அடுத்த கிராமணி தெருவில் வசித்து வரும் சரவணன் என்பவர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தாருடன் ஆரணிக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பிரோவில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அவர்களிடம் தகவல் தெரிவித்தன் அடிப்படையில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version