தேர்தல் பணிக்கு சென்ற அலுவலர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

அரியலூர் மாவட்டம் செந்துறையில் தேர்தல் பணிக்கு சென்ற அலுவலர் வீட்டில், மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் காமராஜ் தேர்தல் பணிக்காக சென்றுவிட்டார். அவரது மனைவி எழிலரசியும் வெளியே சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

வீடு திரும்பிய எழிலரசி வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த செந்துறை காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version