திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகை கொள்ளை: வெளியானது புதிய சிசிடிவி காட்சிகள்

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக புதிதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நேற்று அதிகாலை 3 மணியளவில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை சம்பவம் குறித்து 7 தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பான இரண்டு புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிசிடிவியில், நகைக் கடைக்குள் ஊர்ந்து சென்ற கொள்ளையர்கள் நகைகளை ஒரு பையில் நிரப்பிய காட்சிகள் பதிவாகி உள்ளன. நகைகளை பைகளில் அள்ளிக் கொண்டு செல்வதும் பதிவாகி இருக்கிறது. இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version