இரண்டாவது திருமணத்துக்கு தடையாக இருந்த மனைவி- அடித்துக்கொன்ற ராணுவ வீரர்!

தேனியில், 2-வது திருமணத்திற்கு தடையாக இருந்த மனைவியை, கொலை செய்த ராணுவ வீரர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே ஜெபம் காலனியைச் சேர்ந்த முனீஸ்வரன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளன. ராணுவ வீரரான முனீஸ்வரனுக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது, முனீஸ்வரனின் மனைவிக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. 2-வது திருமணத்திற்கு மனைவி தடையாக இருந்ததால் அவரை முனீஸ்வரன் அடித்துக் கொலை செய்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். பிரேதப் பரிசோதனையில், கொலை செய்யப்பட்டது உறுதியானதால், முனீஸ்வரன் மற்றும் அவரது பெற்றோர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தொடர்புடைய ராஜசேகர் என்பவர் தலைமறைவாக உள்ளதால், அவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version