கைப்பிடித்த கைம்பெண்ணை கழற்றிவிட்ட காவலர் – அடுத்து நடந்தது என்ன?

கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்துவிட்டு, வேறுபெண்ணுடன் நிச்சயம் செய்த காவலரிடம், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுமலதா. கணவன் இறந்த நிலையில் தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சுமலதாவுக்கும், SBCID கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் செல்வகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இரு வீட்டாருக்கும் தெரியாமல் கடந்த ஆண்டு சுமலதாவை, செல்வகுமார் மறுமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் இனித்த காதல் நாளடைவில் கசக்கத் தொடங்கியது.. சுமலதாவுக்கு தெரியாமல் வேறு பெண்களுடன் செல்போனில் தொடந்து பேசி வந்துள்ளார் செல்வகுமார்.

இதனால் சந்தேகமடைந்த சுமலதா, செல்வகுமாரின் செல்போனை எடுத்து பார்த்தபோது அதிர்ந்து போனார். காரணம், செல்வகுமார் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்கள் அதில் இருந்துள்ளன. இது குறித்து செல்வகுமாரிடம் கேட்டபோது ஏதேதோ காரணங்கள் சொல்லி சமாளித்துள்ளார்.

தன்னுடைய தில்லுமுல்லுகளை சுமலதா கண்டுபிடித்துவிட்டதால் அவரிடம் இருந்து விலக ஆரம்பித்த செல்வகுமார், ஒருகட்டத்தில் சுமலதாவை நிரந்தரமாக பிரிந்து சென்றார். இந்த நிலையில் வேறொரு பெண்ணுடன் செல்வகுமாருக்கு திருமண நிச்சயம் முடிந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து ஆத்திரத்தில் பொங்கிய சுமலதா, இதன் பிறகு செல்வகுமார் வேறெந்த பெண்களின் வாழ்க்கையையும் சீரழிக்க கூடாது என்று அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததார். அதன் பேரில் செல்வகுமாரை தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் காவல்துறையினர்.

Exit mobile version