பிரியாணி கடை உரிமையாளர் கைது – கலால் காவலர் மீது புகார்

சென்னையில் பிரியாணி கடை உரிமையாளரை போலி அதிகாரிகளை வைத்து காரில் கடத்தியதாக பூந்தமல்லி கலால் காவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர் காவேரி சாலையை சேர்ந்த வெங்கடேஷ் சங் சாணி என்பவர் தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பயிற்சி மேலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் சென்னை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கடையை பராமரித்து வரும் குப்பன் என்பவரிடம் மாத வாடகைக்கு கடை ஒன்றை எடுத்து வெங்கடேஷ்சங்சாணி பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். முழு ஊரடங்கால் கடை மூடப்பட்டதால், வாடகை கொடுக்க முடியாமல் வெங்கடேஷ் இருந்து வந்த நிலையில், குப்பனின் மகனான காவலர் செந்தில் அடியாட்களை வைத்து அவரை கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், கலால் காவலர் செந்தில் உட்பட 5 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

Exit mobile version