மக்களவையில் மறைமுக விமர்சனம்: பிரதமருக்கு விஜய் மல்லையா கேள்வி

தன் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசிய பிரதமர் மோடி, வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்? என்று, தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, விஜய் மல்லையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, தன் பெயரை குறிப்பிடாமல், 9 ஆயிரம் கோடி ரூபாயுடன் நாட்டை விட்டு ஓடியவர் என்று குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். முழு கடன் தொகையை செலுத்த தயாராக உள்ளதாகவும் அந்த தொகையை கிங்பிஷர் நிறுவனத்தின் பொது நிதியில் இருந்து எடுத்துக் கொள்ளும்படி வங்கிகளிடம் கூறி விட்டதாக கூறியுள்ள விஜய் மல்லையா, ஆனால், தனது கோரிக்கைகளை ஏற்க மறுத்தது ஏன்? என்று வங்கிகளிடம் பிரதமர் ஏன்? கேள்வி கேட்கவில்லை என்று வினவியுள்ளார்.

Exit mobile version