தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதிமுக நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

உலகில் எந்த மூளையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களை காப்பாற்ற அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பில் சந்தை மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நபார்டு திட்டத்தில் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 3 பெண்களுக்கு வாகனங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தஞ்சை பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகம் ஆகம விதிகளின்படி நடைபெறும் என முதலமைச்சர் கூறியுள்ளதாகவும்,  இருமொழிக் கொள்கை என்ற அண்ணாவின் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உலகில் எந்த மூளையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களை காப்பாற்ற அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், ஆட்சியில் இருந்தால் ஒன்று இல்லாவிட்டால் ஒன்று என்பது தான் திமுகவின் நிலைப்பாடு என்றும் விமர்சித்துள்ளார்.

Exit mobile version