நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என அதிமுக அரசு கடைசி வரை போராடியது: கடம்பூர் ராஜூ

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று அதிமுக அரசு கடைசி வரை போராடியதாகவும், விலக்கு அளிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது நளினி சிதம்பரம் தான் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இயற்கை வளங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் மற்றும் ஓட்டப்பந்தய போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர், இதையடுத்து, லட்சுமி மில் மேம்பாலம் முதல், ரயில்வே மேம்பாலம் வரை நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார்.

Exit mobile version