நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாங்குநேரி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்கும் இடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாரத பிரதமரும் சீன அதிபரும் பாராட்டி சென்றிருப்பது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சிக்கு மகுடம் சூட்டியது போல் உள்ளது என்று தெரிவித்தார்.

Exit mobile version