மேக்கப் பற்றி காஜல் என்ன சொல்கிறார் தெரியுமா?

மக்கள் தங்களை புரிந்து கொள்ள முடியாது,ஏனென்றால் நாம் சமூக வலைதளங்களால் சூழப்பட்டுள்ளோம் என்று மேக்கப் இல்லாத புகைப்படுத்துடன் காஜல் அகர்வால் அவரின் கருத்துக்களை வெளிப்படையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்,தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் காஜல் அகர்வால் ஒரு முன்னணி நடிகை என்பதை அனைவரும் அறிவோம்.ரசிகர் பட்டாளமும் அதிகம் கொண்டவர்.தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது,’நாம் அனைவரும் நம்மை பற்றி சிந்திக்க முடியாத உலகில் வாழ்கிறோம்,ஏனெனில் உடல் ஈர்ப்பில் மயங்கி இருப்பவர்களுக்கு நடுவில் வாழ்கிறோம். நாம் யார் மீது அதிக மதிப்பு வைத்துள்ளோமோ,எதனை அதிகம் விரும்புகிறோமோ அதனை சமூக வலைதளங்கள் உடைத்துவிடுகிறது.

அழகான சாதன பொருட்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறோம்.அதனால் நாம் அழகாக தான் இருக்கிறோம் எனவும் உறுதி செய்கிறது.அனைத்து இடங்களில் நாசிசம் இருக்கிறது.புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், தன்னை தானே ரசித்து கொண்டு காதலிப்பது.சில நேரங்களில் அந்த கூட்டத்தில் ஒருவராக நம்மை இணைத்துகொள்கிறோம் அல்லது கூட்டத்தை விட்டு வெளியேறிவிடுகிறோம்.

நமக்கான வேறு ஒரு உருவத்தை வடிவமைப்பதற்கு பதிலாக நாம் யார் என்பதை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்வதே உண்மையான சந்தோஷம்.மேலும், அழகு சாதன பொருட்கள் நம் வெளிப்புறத்தை அழகுப்படுத்துமே தவிற, நமது குணத்தையும்,நாம் யார் என்பதையும் வரையறுக்காது’.

இவரின் இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version