மாட்டுக்கு ஒரு நீதி, பாம்புக்கு ஒரு நீதியா???

மலைப்பாம்பை கையில் வைத்திருப்பது போன்று நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுத்தார். இந்தநிலையில் மலைப்பாம்பினை கையில் வைத்திருப்பது போன்று  வெளியாகி உள்ள அவரது புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஐல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த காஜல் அகர்வால் பாம்பினை துன்புறுத்தும் விதமாக கையில் வைத்திருப்பது விலங்குகளுக்கு எதிரான செயல் இல்லையா என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version