நல திட்ட பணிகள்.. பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் நகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற உள்ளன. தார் சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியின்போது குமாரபாளையம் திமுக நகர மீனவரணி அமைப்பாளர் ரவி, அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கலைமகள் வீதியில் புதிதாக அமைந்துள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி சுவாமி தரிசனம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் குமாரபாளையம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version