ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி பரிசு வழங்கினார்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் புரட்சித்தலைவியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி பரிசு வழங்கினார். குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில், நகர அதிமுக சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டி ஒவ்வொரு பிரிவுலும் தலா 15 குதிரைகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, குதிரைகளும் ஜாக்கிகளும் கலந்துகொண்டனர். குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் வரை, சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு பந்தய தூரமாக நிர்ணயம் செய்யபட்டது. வெற்றி பெற்ற குதிரை மற்றும் ஜாக்கிகளுக்கு பணப் பரிசு மற்றும் கோப்பைகளை, அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி வழங்கினார்.

Exit mobile version