பாதியிலேயே நின்று போன திருமண வரவேற்பு நிகழ்ச்சி !

மாம்பாக்கம் ஊராட்சி செயலர் டில்லிபாபுவின் மகன் சுர்ஜித் என்கின்ற லட்சுமி நரசிம்மனுக்கும் தையூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையெடுத்து மாம்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிறன்று திருமண வரவேற்பும், திங்களன்று திருமணமும் நடைபெற இருந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது மேடையில் மணமகளுடன் நின்று கொண்டிருந்த மணமகன், மதுபோதையில் தள்ளாடியபடி மணமகள் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மணமகள், தனக்கு போதை மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியதோடு திருமணத்தையும் நிறுத்தினார். இதன் காரணமாக இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், மணமகனை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர். அப்போது மணமகனை, மணப்பெண்ணின் உறவினர்கள் தாக்க முயன்றதால் மண்டபத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version