செங்கல்பட்டு – தனியார் டேங்கர் லாரிகளால் சாலையில் விடப்படும் கழிவு நீர்..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கழிவுநீரை சாலையோரங்களில் திறந்து விடும் தனியார் டேங்கர் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிற்சாலைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படும் கழிவு நீர், தனியார் டேங்கர் லாரிகள் வாயிலாக தினமும் இரவு நேரங்களில் சிப்காட் பகுதியில் திறந்து விடப்படுவதால் அந்த சாலையில் வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள், டிரைவர்கள் என அனைவருக்கும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மழைபெய்யும் நேரத்தில் மழைநீரோடு கழிவு நீரும் சேர்ந்து பக்கத்தில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் தேங்குவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.YouTube video player

Exit mobile version