செங்கல்பட்டு.. ஸ்மார்ட் டிவியை ஸ்மார்ட்டாக திருடிய இளைஞர்!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இளைஞர் ஒருவர் ஜிபே மூலம் மோசடி செய்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் டிவியை நூதன முறையில் திருடி சென்றுள்ளார். கேளம்பாக்கத்தில் தனியார் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், இளைஞர் ஒருவர் போலியான கூகுள் பே ஆப்பை பயன்படுத்தி பணம் செலுத்திவிட்டதாக கூறி, 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டி.வியை எடுத்து சென்றுள்ளார். பின்னர், கடை ஊழியர்கள் வங்கி கணக்கை பார்த்தபோது, வாடிக்கையாளர் அனுப்பிய பணம் வராததால் அதிர்ச்சியடைந்தனர். புகாரின் பேரில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.

 

Exit mobile version