ஏப்ரல்1 முதல்..சுங்க சாவடிகளில் 5 முதல் 15 விழுக்காடு வரை கட்டண உயர்வு!

மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தவுள்ளது. அதன்படி மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் சென்ன சமுத்திரம், சூரப்பட்டு, ஆத்தூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5% முதல் 15% வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் வகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version