செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 8 கார்கள் சேதம்!

சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அதிக அளவில் சென்னை திரும்பி செல்லத் தொடங்கினர். இந்நிலையில், செங்கல்பட்டு மாமண்டூர் அருகே, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது லாரி குறுக்கே வந்ததால் கார் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக பின்னால் வந்த 8 கார்கள் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர் முதல் படாளம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Exit mobile version