முதல்வர் நிகழ்ச்சிக்கு வந்த மேயரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள் !

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மேயர் சுஜாதாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், அவருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பின்னர், மேயர் சுஜாதா மேடைக்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது, முதல்வரின் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம், நான் தான் வேலூர் மேயர் சுஜாதா என்று கெஞ்சிக்கேட்டும், அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் செய்வதறியாமல் தவித்த மேயர் சுஜாதா, நிகழ்ச்சி முடிந்த பிறகு முதல்வருக்கு மரியாதை செலுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.

Exit mobile version