நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு

சென்னை தரமணியில் மே மாதம் 18ஆம் தேதி, நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பேசியதற்காக தெரிகிறது. இதனையடுத்து, அவர் மீது தரமணி காவல் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கலவரத்தை தூண்டுதல், பிரிவினையை ஏற்படுத்துதல், மிரட்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் கீழ், சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version