மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக முன் அனுமதி பெறாமல் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட மக்களவை தேர்தல் திமுக கூட்டணி வேட்பாளரான இவர், வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வரும் வழியில் கோரிப்பாளையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் முன் அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக தெரிகிறது. இதனால், மதுரை தெற்கு வட்டாட்சியர் தங்கமீனா அளித்த புகாரின் பேரில் வெங்கடேசன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version