இலங்கை அரசு நடத்தும் காட்டுமிராண்டி தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது -அமைச்சர் ஜெயகுமார்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் காட்டுமிராண்டி தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், திசை மாறி சென்ற மீனவர்களை சிறையில் அடைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது தொடர்பாக முதலமைச்சர் மூலம் பிரதமரை பல முறை வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறினார். இலங்கை அரசின் இது போன்ற காட்டுமிராண்டி தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் மத ரீதியிலான பிரச்சனையில் வன்முறை என்றைக்கும் தீர்வாகாது எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version